நகை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை..

கோவை செட்டி வீதி, அசோக் நகர், பாலாஜி அவென்யூவை சேர்ந்தவர் சண்முகம். ( வயது 56)நகை தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர். இவர் குடும்பத் தகராறு காரணமாக நேற்று ஆனைகட்டி ரோட்டில் உள்ள ஒரு செங்கல் சூளை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது மனைவி ராதா (வயது 44) தடாகம் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது..