மதுவில் விஷம் கலந்து குடித்து பெண் தற்கொலை.

கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணாம்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் . கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி ( வயது 42) இவர்களுக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். செல்வி குடிப்பழக்கம் உடையவர் .இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வி நேற்று மதுவில் சாணி பவுடரை கரைத்துக் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது கணவர் அய்யப்பன் வடவள்ளி போலீசில் புகார் . சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.