பாகிஸ்தானின் அவலம்… ராணுவ வீரர்ககளை பட்டினி போடும் அரசு.. பரிதவிக்கும் மக்கள்..!

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ள பெருக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.

இது பண வீக்கத்திற்கு காரணமாக அமைந்தது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் திணறி வரும் பாகிஸ்தான், வரும் மாதத்தில் மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனிடையே அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணக்கை குறைப்பு போன்ற நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி, மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 12.90 உயர்ந்து 202.73 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது சரிந்துள்ளதால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி, வெங்காயம் (482.07 சதவீதம்), சிக்கன் (101.93 சதவீதம்), தேயிலை (65.41 சதவீதம்), முட்டை (64.23 சதவீதம்), டீசல் (57.34 சதவீதம்), பாசுமதி அரிசி (56.09 சதவீதம்), பாசிப்பயறு (55.63 சதவீதம்), அரிசி மாவு (55.63 சதவீதம்)அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி இருக்கும் சூழலில் ராணுவ வீரர்களுக்கே உணவு வழக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஊடகங்களில் கூற்றுப்படி, ராணுவத்திற்கான சிறப்பு நிதி குறைக்கப்பட்டதை தொடர்ந்து வீரர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு வழங்கப்படுவதில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பீல்டு கமாண்டர்கள், குவார்ட்டர் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர். இதனை அடுத்து, உணவுப்பொருள் விநியோகம் மற்றும் சரக்கு போக்குவரத்து பிரச்சனை தொடர்பாக சரக்குப் போக்குவரத்து தலைமை அதிகாரி மற்றும் ராணுவ இயக்குநர் ஜெனரல் ஆகியோருடன் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கான உரிய நடவடிக்கை எடுத்து வருவது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பாகிஸ்தானில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. வாராந்திர பணவீக்கம் 40 சதவீதத்தை தாண்டியுள்ளது. ஐந்த மாதங்களில் முதல் முறையாக பணவீக்கம் 40 சதவிதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனால்தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மருந்து தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.