நடுரோட்டில் மனைவிக்கு அரிவாள் வெட்டு – கணவர் கைது..!

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜர் புரத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி அனிதா (வயது 31) இவர் கோவை மாநகராட்சி 32 -வது வார்டில் துப்புறவு பணி காண்ட்ராக்ட் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார் .இவரது கணவர் வடிவேல் (வயது 40) குடிப்பழக்கம் உடையவர் .கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து பழனி பக்கம் உள்ள நரிக்கல்பட்டியில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவர் கோவைக்கு வந்தார் .ரத்தினபுரி கண்ணப்பன் நகரில் வேலை செய்து கொண்டிருந்த அனிதாவிடம் சென்று தகராறு செய்தார். பின்னர் மறைத்து வைத்திருந்தஅரிவாளால் அவரை வெட்டினார் இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இதைத் தடுக்க முயன்ற ஆனந்த் பாபு என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது .இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையை சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து அனிதா ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார்: இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்துஅனிதாவின் கணவர் வடிவேலுவை கைது செய்தார். இவர் மீது கொலை முயற்சி உட்பட 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.