கல்லூரி மாணவரை வழிமறித்து தாக்கி செல்போன், பைக் கொள்ளை – 3 பேர் கைது..!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் தேவ கணேஷ் (வயது 20) கோவை குனியமுத்தூர் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் (ஐ. டி.) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கோவை புதூர் அறிவொளி நகர் ரோட்டில் தனது நண்பருடன் நடந்து சென்றார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் இவரை வழிமறித்து கல்லால் தாக்கினார்கள்..பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதில் காயமடைந்த தேவ கணேஷ் சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து அறிவொளி நகர், அண்ணா சதுக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன்( வயது 21 ) சூர்யா ( வயது 23) விக்னேஷ் (வயது 23) ஆகியோரை நேற்று கைது செய்தார். இவர்களிடமிருந்து பைக் ,செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் மணிகண்டன் மீது ஏற்கனவே மதுக்கரை காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது..