கோவையில் கணவனை கிரைண்டர் கல்லால் அடித்துக் கொன்ற மனைவி கைது….

கோவையில் கணவனை கிரைண்டர் கல்லால் அடித்துக் கொன்ற மனைவி கைது….

கோவை போத்தனூர் அடுத்த பிள்ளையார்புரம் சிவன்மலை பகுதியை சேர்ந்த ரங்கன் (35) – கோகிலா (30), இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில், 7 வயதில் மகள் உள்ளார். ரங்கன் குடிபோதையில் வீட்டிற்கு வருவதாக அவருக்கும் மனைவி கோகிலா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல காலையில் இருந்து குடிபோதையில் இருந்த ரங்கன் வீட்டில் இருந்த போது இருவரும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தூங்கச் சென்ற நிலையில், இரவு சுமார் 11.30 மணியளவில் ஆத்திரத்தில் இருந்த கோகிலா கிரைண்டர் கல்லை தூக்கி ரங்கன் தலையில் போட்டு தாக்கியுள்ளார். தகவலறிந்த வந்த ரங்கனின் உறவினர் அவரை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். தகலறிந்து வந்த போத்தனூர் போலீசார், ரங்கனில் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தோடு, கோகிலாவை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.