செல்போன் பேசிக் கொண்டிருந்த போது டாக்டர் மனைவியிடம் 4 பவுன் தாலி செயின் பறிப்பு..!

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம்,சங்கரா கண் மருத்துவமனை ரோட்டை சேர்ந்தவர் டாக்டர் வெங்கிடுசாமி. இவரது மனைவி மாலினி வெங்கடசாமி ( வயது 57 )இவர் நேற்று மாலையில் கணபதி ஸ்ரீ லட்சுமி நகரில் உள்ள தனது தம்பி வீட்டின் முன்  நின்று கொண்டு செல்போன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 4 பவுன்தாலிச் செயினை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மாலினி வெங்கிடுசாமி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.