காதல் தகராறில்… காதலன் கடத்தி கொலை – 5 பேருக்கு வலை.!!

கோவை இருகூர் மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் . இவரது மகன் ஜெயச்சந்திரன் (வயது 23) இவர் வெள்ளலூரில் உள்ள பெட்ரோல் பங்கில் பம்ப் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார்.இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சுருளி என்றசுரேந்திரனின் தங்கை சிந்துவை காதலித்து வந்தாராம்.இதை சுரேந்திரனின் குடும்பத்தினர் கண்டித்தனர். தொடர்ந்து ஜெயச்சந்திரன் காதலித்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுருளி என்ற சுரேந்திரன் கடந்த 26 ஆம் தேதி தனது நண்பர்கள் அஜித், கார்த்திக், நவீன், குழந்தை ஆகியோருடன் ஜெயச்சந்திரனைசிந்து விஷயமாக தனியாகபேச வேண்டும் என்றுதடாகம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து சவுக்கு கட்டையால் ஜெயச்சந்திரனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் அவர் படுகாயம் அடைந்தார்.பின்னர் அவரை வீட்டின் அருகில் கொண்டு போய் விட்டனர்இந்த சம்பவம் குறித்து அவரது வீட்டில் எதுவும் சொல்லவில்லை.காயத்தை பார்த்த அவரது தாயார் ராதிகாசம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் ஜெயச்சந்திரன் நேற்று இறந்தார். இது குறித்து அவரது தாயார் ராதிகா போத்தனூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சுருளி என்ற சுரேந்திரன் ,அஜித், கார்த்திக் ,நவீன், குழந்தை ஆகியோரை தேடி வருகிறார்கள்.