பவானிசாகர் அருகே விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா- திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் மாங்கல் மொக்கை செல்வகணபதி நகரில் அமைந்துள்ள மகா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா  நடைபெற்றது. முன்னதாக நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு கணபதி ஹோமம் முதல் கால பூஜை, கலச பூஜைகள், திரவ்ய யாகம், பூர்ணாகுதி, தீபாராதனை மற்றும் சுவாமி சிலை பிரதிஷ்டை செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜைகள், நாடி சந்தானம், தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு மகா கணபதிக்கு கும்பாபிஷேகத்தை பவானிசாகர் கோட்டை கோவில் ஆலய அர்ச்சகர் சோமசுந்தர சேகர குருக்கள் மற்றும் கௌரிசங்கர் சிவம் ஆகியோர் நடத்தி வைத்தனர். இதைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மகா கணபதி ஆலய விழா குழுவினர் செய்திருந்தனர்.