தமிழக தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று திருச்சியில் மேற்கொண்ட அதிரடி அரசியல் நகர்வு, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் விஜய், இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து நேராக திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட வயர்லெஸ் சாலையில் உள்ள புகழ்பெற்ற புனித அந்தோணியார் ஆலயத்திற்கு விஜய் சென்றார்.
அந்தோணியார் ஆலயத்திற்குச் சென்ற விஜய், அங்குள்ள பீடத்தின் முன் மண்டியிட்டு, முட்டிப் போட்டபடி நடந்து சென்று நீண்ட நேரம் உருக்கமாகப் பிரார்த்தனை செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
இன்றுதான் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து திமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்தச் சூழலில், விஜய் பொதுவெளியில் தான் ஒரு தீவிர கிறிஸ்தவர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்தச் செயலைச் செய்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, திருச்சி கிழக்குத் தொகுதியில் சுமார் 35% வாக்காளர்கள் கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் வாக்குகளை நேரடியாகக் கவரும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
விஜய்யின் இந்த அதிரடி மாற்றமும், கிறிஸ்தவ அடையாளத்தை அவர் முன்னிறுத்துவதும் அதிமுக முகாமில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின்னால் ஒரு முக்கியமான தேர்தல் கணிப்பு உள்ளது:
வாக்குகள் சிதறும்: பொதுவாக கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மையின வாக்குகள் திமுகவின் கோட்டையாகக் கருதப்படுபவை. தற்போது விஜய் அந்த வாக்கு வங்கியில் கை வைப்பதால், திமுகவிற்குச் செல்ல வேண்டிய வாக்குகள் இரண்டாகப் பிரியும் (DMK & TVK). இதில் விஜய் பாதியை எடுத்தால் போதும்.. வாக்குகள் அப்படியே சிதறும். அப்படியே மற்ற வாக்குகள் எதிரணிக்கு செல்லும். அதாவது அதிமுகவிற்கு மற்ற வாக்குகள் அதிமுகவிற்கு செல்லும். அதிமுக வாக்குகள் உடையாமல் இருப்பதால் அது அவர்களுக்கு சாதகமாக மாறும்.
அதிமுகவிற்குச் சாதகம்: ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளும், சிறுபான்மையின வாக்குகளும் சிதறும்போது, அது எதிர்க்கட்சியான அதிமுகவிற்குப் பெரும் சாதகமாக அமையும். தங்களுக்கு வர வேண்டிய வாக்குகளைத் தக்கவைத்துக்கொண்டு, எதிர்தரப்பு வாக்குகளை விஜய் பிரிப்பது தங்களுக்கு வெற்றியை எளிதாக்கும் என அதிமுக நம்புகிறது.
ஆயர்களின் ஆதரவைப் பெற்று திமுக தெம்பாக இருந்த நிலையில், விஜய் நேரடியாக மக்களின் உணர்வுகளோடு களம் இறங்கியிருப்பது ஆளும் தரப்பிற்குச் சிறு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துவர்கள் இடையே யாருக்கு வாக்களிப்பது என்ற பிரிவினையை இது ஏற்படுத்தும். . “ஆயர்கள் சொன்னாலும், மக்கள் என் பக்கம் நிற்பார்கள்” என்பதை நிரூபிக்க விஜய் எடுக்கும் இந்த முயற்சி, தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.









