ரஷ்யாவை தாக்குவதற்கு உக்ரைனுக்கு உதவ களமிறங்கும் அமெரிக்கா… ஜோ பைடன் ஓப்பன் டாக்.!

உக்ரைன் – ரஷியா போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு தேவையான இராணுவ தளவாடங்கள், பொருளாதார உதவி போன்றவற்றை ஏகாதிபத்திய மேற்கு நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்றவை செய்து வருகின்றன.

போரின் தொடக்கத்தின் போதே ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைனுக்கு ஆதரவாக போர்க்களத்திற்கு மற்றொரு நாடு வந்தால் வரலாற்றில் இல்லாத அழிவை தருவோம் என்று எச்சரித்து இருந்தார்.

இந்தநிலையில், பிரிட்டனை தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிரான போரில், தங்களுக்கு கூடுதலான உதவிகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து ரஷ்யாவை தாக்குவதற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுகையில், போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் 800 அமைப்புகள், ஹெலிகாப்டர்கள், ராணுவ டாங்கிகள், எதிரிகளின் ராணுவ நிலைகளை அழிக்கும் திறன் படைத்த 9 ஆயிரம் ஆன்டி ஆர்மர் தொகுப்புகள், துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்ற 7 ஆயிரம் சிறு ஆயுதங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.