மனைவியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற குடிகார கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை..!

கோவை துடியலூர் அருகே உள்ள கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் சக்தி என்ற பாலமுருகன் (வயது 42) இவரது மனைவி ஹேமலதா ( வயது 37) சக்தி என்ற பால முருகன் குடி பழக்கம் உடையவர் . எந்த வேலைக்கும் செல்லவில்லை. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். இதனால் இவரது மனைவி கோவில் மேடு பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார் .இந்த நிலையில் 21. 10-2016 அன்று கணவர் சக்தி என்ற பாலமுருகன் குடிபோதையில் மனைவியிடம் சென்று தகராறு செய்தாராம். பின்னர் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார் . இவரை துடியலூர் போலீசார் கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர் .இந்த வழக்கு கோவை செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி கவுதம் வழக்கை விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட கணவர் சக்தி என்ற பாலமுருகனுக்கு 5 – ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்..