தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அண்ணனும் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை, குமரன் அவென்யூவை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் மனோஜ் குமார் ( வயது 24) செட்டிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தம்பி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார் .அதிலிருந்து மனோஜ் குமார் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார் . இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை ராஜன் துடியலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது..