ரூ.16 லட்சம் மதிப்புள்ள ஜெனரேட்டர்கள் திருட்டு – 2 பேர் கைது..!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 30 கே.வி.திறன் கொண்ட 2 ஜெனரேட்டர்கள் திருட்டு போனது.இதன் மதிப்பு ரூபாய் ரூ.16 லட்சம் இருக்கும் .இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நெல்லை மாவட்டம்,சேர்மாதேவி பக்கம் உள்ள முக்கூடல், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த கணேஷ் ( வயது 36) நாமக்கல் மாவட்டம், மோகனூர் பக்கம் உள்ள செவ்வந்திப்பட்டியை சேர்ந்த மணிமாறன் ( வயது 31) ஆகியோரை கைது செய்தனர். 2 ஜெனரேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..