இருகூரில் 40 கிலோ குட்கா பறிமுதல், வியாபாரி கைது

கோவை ஜன 1 கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி நேற்று இருகூர் ஜின்னிங் பாக்டரி ரோட்டில் உள்ள ஒரு பெட்டிகடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குதடை செய்யப்பட்ட புகையிலை பொருளான 40 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கபட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாக இருகூர் தென் பழனி தேவர் வீதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 40)கைது செய்யப்பட்டார் .இவர் மளிகை கடையும், டீ ஸ்டாலும் நடத்திவருகிறார்.இவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர்.