பைக்கில் கஞ்சா, போதை மாத்திரைகள் கடத்தல்- கல்லூரி மாணவர்கள் இருவர் கைது ..!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் போலீசார் நேற்று அங்குள்ள சேரன் மாநகர், விளாங்குறிச்சி பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது பைக்கில் வேகமாக வந்த 2 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். உடனே போலீசார் அந்த மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாக்கியபுரத்தைச் சேர்ந்த ஜான்சன் மகன் விகாஸ் ஷாம் (வயது 21 )தேனி மாவட்டம், கூடலூர் சேர்ந்த கண்ணன் மகன் அஸ்வத் சூர்யா ( வயது 20 )என்பதும் தெரிய வந்தது .இவர்கள் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கலை- அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார்கள். அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா, 2 லிட்டர் கஞ்சா எண்ணெய்,போதை மாத்திரை தூள் 5 கிராம், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.