கோவை – மதுரை இடையே நாளை முதல் பயணிகள் ரயில் இயக்கம்..!

கோவையில் இருந்து மதுரைக்கு செல்ல, கோவை, ஈரோடு, கரூா், திண்டுக்கல்,
மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் கோவை – நாகா்கோவில் ரயிலில் வழக்கமாக
கூட்டம் அதிகமாகக் காணப்படும்.

பயணிகள் வசதிக்காக கோவை – மதுரை இடையே நேரிடையாக விரைவு ரயில் இயக்க
வேண்டும் என ரயில் பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், கோவை – பழனி, பழனி – மதுரை வழித்தடத்தில் (06462, 06463)
ஆகிய எண்களிலும், மதுரை – பழனி, பழனி – கோவை வழித்தடத்தில் (06479,
06480) ஆகிய எண்களிலும் இயக்கப்பட்டு வந்த கோவை – பழனி – மதுரை இணைப்பு
ெரயில் வருகிற நாளை (1-ந் தேதி) முதல் கோவையில் இருந்து மதுரைக்கு
(16721) என்ற எண்ணிலும், மதுரையில் இருந்து கோவைக்கு (16722) என்ற
எண்ணிலும் முன்பதிவற்ற விரைவு ரயிலாக இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம்
சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவையில் இருந்து நாளை (1-ந் தேதி) முதல் பிற்பகல் 2.05 மணிக்குப்
புறப்படும் விரைவு ரயில் (எண்: 16721) இரவு 7.35 மணிக்கு மதுரையைச்
சென்றடையும். மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும் விரைவு
ரயில் (எண்: 16722) பிற்பகல் 12.45 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயிலானது, போத்தனூா், கிணத்துக்கடவு , பொள்ளாச்சி, கோமங்கலம்,
உடுமலை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூா், பழனி, சத்திரப்பட்டி,
ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை,
வாடிப்பட்டி, சோழவந்தான், கூடல் நகா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று
செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.