கோவை இன்ஜினியர் வீடு புகுந்து துணிகர திருட்டு..!

கோவை ராமநாதபுரத்தில் உள்ள ராமலிங்கம் ஜோதி நகர் 7-வது வீதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகன் டோமினிக் இன் பேன்ட்ராஜ் (வயது 25) ஐ. டி. இன்ஜினியர். வீட்டிலிருந்து வேலை செய்து வந்தார். இரவில் வேலை முடிந்ததும் கதவை பூட்டாமல் தூங்க சென்று விட்டார் .நேற்று காலையில் பார்த்தபோது மேஜையில் இருந்த லேப்டாப் ,அடாப்டர், ஹெட்செட் ,செல்போன் கைக்கடிகாரம், போன்ற பொருட்களை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து டொமினிக் இன்பேன்ட்ராஜ் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..