தனியார் வானொலி பெயரில் வங்கி கணக்கு தொடங்கி 30 மோசடி- போலிசார் வழக்குப்பதிவு..!

கோவை வின்சென்ட் ரோட்டில் தனியார் வானொலி(Suryan FM) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மார்கெட்டிங் அசிஸ்டெண்ட் மேனேஜராக பணியாற்றியவர் பிரதீப்குமார். இவர் 2017 ஆம் ஆண்டிற்கு முன்பு தனியார் வங்கி ஒன்றில் சூரியன் என்ற பெயரில் வங்கிக் கணக்கு ஒன்று துவங்கி விளம்பரத்திற்காக 30 லட்சத்து 67 ஆயிரம் பெற்று மோசடி செய்ததாக வானொலியின் நிர்வாக அதிகாரி ராஜ்செல்வா உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.