சட்டக் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து பெண் அதிகாரியை தாக்கி மிரட்டல்..!

கோவை மருதமலை ரோட்டில் அரசு சட்டக் கல்லூரி உள்ளது. இங்குள்ள அலுவலகத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருபவர் புனிதா.இவர் நேற்று அலுவலகத்தில் பணியில் இருந்தார்.அப்போது ஒருவர் அலுவலகத்துக்குள் அத்துமீறி உள்ளே புகுந்து புனிதாவை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி, தாக்கி, பணி செய்ய விடாது தடுத்துள்ளார் . இதுகுறித்து கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளளார்.போலீசார் ரமேஷ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல், உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.