பகுதி நேர வேலை தருவதாக கூறி ரூ.20 லட்சம் ஆன்லைன் மோசடி..!

கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி என் மில், சேரன் நகரை சேர்ந்தவர் ஜெமினி ( வயது 47) இவருக்கு 24- 8 -20 24 அன்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் மிகப்பெரிய நிறுவனத்தில் பகுதிநேர பணி இருப்பதாகவும், அதில் சேர்ந்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய ஜெமினி பல்வேறு தவணைகளில் அந்த முகவரிக்கு ரூ 19 லட்சத்து 74 ஆயிரத்து 900 அனுப்பி வைத்தார் .வேலை எதுவும் கிடைக்கவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெமினி கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.