வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து முன்னாள் காதலியை திருமணம் செய்ய அழைத்து தகராறு- ஐடி ஊழியர் மீது இளம்பெண் புகார்..!

கோவை ரத்தினபுரி அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்.
ஐ.டி.ஊழியர் இவர் ரத்தினபுரி போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறேன். கடந்த சில
வருடங்களுக்கு முன்பு முத்துகோனார் வீதியை சேர்ந்த ஐ.டி. நிறுவனத்தில்
ஊழியராக வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும்
செல்போனில் பேசியும் எங்களது காதலை வளர்த்து வந்தோம்.

இந்தநிலையில் எங்கள் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனையடுத்து நாங்கள் காதலை கைவிட்டு விட்டு பேசுவதையும் பழகுவதையும்
தவிர்தோம். எனது பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். எனது காதலனும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நான் எனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன்.

சம்பவத்தன்று நான் வீட்டில் இருந்தேன். அப்போது எனது முன்னாள் காதலன்
வீட்டிற்குள் குடிபோதையில் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் என்னிடம்
வந்து வா நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என அழைத்தார். நான் அதற்கு
மறுத்து விட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் எனது வீட்டில் இருந்த
பீரோவில் உள்ள கண்ணாடியை உடைத்து விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வீட்டிக்கு
நுழைதந்து முன்னாள் காதலியை திருமணம் செய்ய அழைத்து தகராறு செய்த வாலிபர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.