இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது..!

இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது..!  கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண் .இவர் தனது வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார் .அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவர் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட்டார். அதைக் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அந்த இளம்பெண்அன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இளம்பெண் குடிப்பதை வீடியோ எடுத்தது அந்த பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அவர் போலீசருக்கு பயந்து தன் செல்போனில் இருந்து வீடியோக்களை அழித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.