கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்: தொழிலாளியை அடித்து கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை..!

கோவை : தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த சித்திரைவேல், இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.  இந்நிலையில் வெள்ளலூரைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு சித்திரவேலின் அண்ணன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் சித்திரைவேலின் மனைவி தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு கள்ள காதலன் ராஜனுடன் சென்று தனியாக வசித்து வந்தார். இதனால் சித்திரைவேல் வெள்ளலூருக்கு சென்று ராஜனை தட்டிகேட்டுள்ளார். இதை தொடர்ந்து அவருடைய மனைவி மனம் திருந்தி ராஜனை விட்டு பிரிந்து சித்திரவேலுடன் குடும்பம் நடத்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜன் தனது கள்ளக் காதலுக்கு சித்திரைவேல் இடையூறாக இருப்பதாக கருதினார். இதையடுத்து அவர் தனது கூட்டாளிகளுடன் சென்று கடந்த 17-.5. – 2020 அன்று வீட்டில் இருந்த சித்திரை வேலை தடியால் அடித்து கொலை செய்தனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ராஜன் அவருடைய கூட்டாளிகள் அரவிந்த் குமார், செல்வகுமார் ஆகிய
3பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது . வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ராஜன், கூட்டாளிகள் அரவிந்த் குமார், செல்வக்குமார் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.