சேவல் சண்டை நடத்தி சூதாடிய 3 பேர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சி பட்டி இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு நேற்று தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் அங்கு சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக வெள்ளிய கவுண்டன் புதூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் ( வயது 24) கவியரசு ( வயது 26 )பிரசாத் குமார் ( வயது 35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சூதாட பயன்படுத்தப்பட்ட பணமும் , சேவலும் பறிமுதல் செய்யப்பட்டது.