கோவை தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருட்டு..!

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, ஆனந்தா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 30) தொழில் அதிபர் .இவர் கடந்த 26 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து சதீஷ்குமார் துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.