நாளை மற்றும் நாளை மறுநாள் முழு அடைப்பு போராட்டம் … வெளியான திடீர் அறிவிப்பு..!

மிழகத்தில் இந்துக்களை அவமரியாதையாக திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் இந்துக்களை அவமரியாதையாக பேசிய திமுக எம்பி ராசாவை கண்டித்து புதுச்சேரியில் 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. அதற்கு போட்டியாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றம், புதுவைக்கு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு துரோகம் செய்துள்ளதாகவும் அதனை கண்டித்து பெரியார் இயக்கங்கள் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இரு அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஏட்டிக்கு போட்டியாக போராட்டம் நடத்தப் போவதாக அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.அதேசமயம் நவராத்திரி விழா மற்றும் தீபாவளி பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள இந்த நேரத்தில் இரண்டு நாட்கள் வந்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரி வியாபாரிகள் இடையே கவலை ஏற்பட்டுள்ளது.அதில் இரு தரப்பிலும் முழு அடைப்பு போராட்ட முடிவை வாபஸ் பெறவில்லை எனில், 144 தடையுத்தரவு பிறப்பிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.