இன்று குண்டு வெடிப்பு தினம் – கோவையில் போலீசார் குவிப்பு.!!

கோவையில் இன்று குண்டுவெடிப்பு நடந்த தினம் ஆகும். இதையொட்டி கோவையில் உள்ள ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையம், கோவில்கள் மசூதிகள் ,கிறிஸ்தவ ஆலயங்கள்  ஆகியவற்றில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வஜ்ரா வாகனம் , கலவர தடுப்பு வாகனங்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. கோவையில் உள்ள 11 சோதனைச் சாவடிகளிலும் நேற்று இரவு விடிய, விடிய சோதனை நடந்தது. 1500 போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..