கோவையில் இன்று லோக் அதாலத் – நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு..!

கோவை: நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாக தேங்வதை தவிர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டப்பணி ஆனைக் குழுவின் தலைவர் மாவட்ட நீதிபதி ராஜசேகர் தலைமையில், நீதிபதிகள் கோவிந்தராஜன், குலசேகரன், முரளிதரன், ராமகிருஷ்ணன், சஞ்சீவி பாஸ்கர், மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டக் குழு ஆணையத்தின் செயலாளர் சார்பு நீதிபதி கங்கா ராஜ் செய்திருந்தனர். இந்த மக்கள் நீதிமன்றமானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலூர் ஆகிய கோர்ட்டுகளில் நடந்தது.

இதில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், குடும்ப பிரச்சினை வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரச முறையில் இன்றைய தினமே தீர்வு காணும் வகையில் பல்வேறு அமர்வுகளாக நடைபெற்றது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீதி மன்றங்களில் ஆஜராகி வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்து கொண்டனர். இந்த லோக் அதாலத்தை பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண பயன்படுத்திக் கொண்டனர்.