வியாபாரி ஸ்கூட்டரில் பணம்- செக் புக் திருட்டு…

கோவை எம் .என். ஜி வீதியை சேர்ந்தவர்தண்டபாணி ( வயது 52) வியாபாரி. இவர் நேற்று உக்கடம் இஸ்மாயில் வீதியில் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அங்குள்ள கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரில் இருந்த பணம் ரூ 5 ஆயிரம், செக் புக் ,ஆதார் கார்டு ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து தண்டபாணி உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அதே பகுதி சேர்ந்த ஷேக் அகமது உசேன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.