எலக்ட்ரிசியனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கொள்ளையன் கைது…

கோவை அருகே உள்ள ராக்கி பாளையம் ,அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் விக்னேஷ் (வயது 33) எலெக்ட்ரிசினாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று துடியலூர், சந்தைப்பேட்டை ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி தான் மதுரையை சேர்ந்த ரவுடி என்று கூறி அவரிடமிருந்து 500 ரூபாயை கொள்ளை அடித்து விட்டு தப்பிச் சென்று விட்டார் .இது குறித்து விக்னேஷ் துடியலூர் போலீஸ் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்கு பதிவு செய்து மதுரை சாக்கிமங்கலத்தைச் சேர்ந்த அப்துல் சமீர் ( வயது 21 )என்பவரை கைது செய்தார் .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.