அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகை திருட்டு – மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள செல்லனூரில் மகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தங்கராசு என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு கோவிலின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர் அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மறுநாள் காலையில் கோவிலை திறக்க வந்த பூசாரி அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.