திராவிட மாடல் என்றால் என்ன என கேட்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை – முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!!

டில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான். மறக்க முடியாத குரல் இது; 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மக்கள் பணிக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன்;

மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா? என என்னை நானே கேட்டுக்கொண்டபோது தெம்பும், தைரியமும் கொடுத்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய 3 பேர். மக்களுக்கு பணியாற்றுவது எனக்கு புதிதல்ல, சிறுவனாக இருந்துபோதே திராவிட இயக்கத்திற்கு என்னை ஒப்படைத்துக் கொண்டேன்;

தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்கும் தான் நான் முதலமைச்சர்; அவர்களுக்காக ஓய்வின்றி என் சக்திக்கும் மீறி பணியாற்றி வருகிறேன். இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் முதலமைச்சர் பொறுப்பில், தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுச் செல்ல முழுமையாக அர்பணித்துக் கொண்டேன்,திராவிட மாடல்னா என்னனு? கேட்கிறவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, உங்கள் புன்னகையே பதில் சொல்கிறது; எல்லோருக்கும் எல்லாம் என்பது திராவிட மாடல். சாதியால், மதத்தால் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல்னா புரியாது; மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியிலிருப்பவர்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை செயற்கையாக வரவழைக்க முடியாது. மக்களின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி;மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் கை தூக்கி விடும் அரசு தான் திமுக அரசு; அனைவருக்குமான வளர்ச்சியைக் கொண்டு செயல்படுவது திமுக அரசு. ஆட்சியின் முகம் அதிகாரம் அல்ல அன்பு, சனாதனம் அல்ல சமூகநீதி அதனால், சிலரால் அரசு விமர்சிக்கப்படுகிறது சிலரால் நேசிக்கப்படுகிறது. 2 ஆண்டு சாதனைகளை நான் சொல்லி முடிக்க வேண்டும் என்றால் நீங்கள் 2 நாட்கள் இங்கேயே தங்கி கேட்க வேண்டி இருக்கும்; இருண்டு கிடந்த தமிழ்நாட்டில் விடியலை ஏற்படுத்தியுள்ளோம்; மக்களின் மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் என்னை இன்னும் உழைக்க ஊக்குவிக்கும், உங்களில் ஒருவனாக உங்களோடு ஒருவனாக இருப்பேன்” என்றார்.