குளியலறையில் செல்போன் மறைத்து வைத்து பெண்கள் குளிப்பதை படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஈரோடு இளைஞர் போக்ஸோவில் கைது..!

பெண்கள் குளியறையில் செல்போனை வைத்து அவர்கள் குளிப்பதையும், உடை மாற்றுவதையும் படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஈரோடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில் அடுத்துள்ள விருப்பம் பதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் .23 வயதான இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தான் குடியிருக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்கள் குளியலறையில் , செல்போனை ரகசியமாக மறைத்து வைத்து பெண்கள் குளிப்பதையும், உடை மாற்றுவதையும் படம் பிடித்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் செய்ததையடுத்து இன்று மாலை ஜீவானந்தம் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து செல்போன்கள், மெமரி கார்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர் பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு கோபி கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்..