கோவை விமானத்தில் கடத்தி வந்த அரிய வகை வனவிலங்குகள் பறிமுதல் – 2 பேர் சிக்கினர்..!

கோவை : கடந்த 7-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து ஒரு விமானம் கோவை வந்தது.

அதில் பயணம் செய்த 3 பயணிகள் தங்களது ஒரு பெட்டியை விட்டுச் சென்றுள்ளனர். அதை சுங்கத்துறை அதிகாரிகள் எடுத்து பார்த்தனர். அதில் அரிய வகை ஆமை,பாம்பு, சிலந்தி, ஒணான் உள்ளிட்டவை இருந்துள்ளன. பின்னர் அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பேசி விமானநிலையத்துக்கு வரவைத்து பிடித்துள்ளனர்.

இது தொடர்பாக டோம்னிக், ராமசாமி ஆகிய இருவர் சிக்கியுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். வனத்துறையினருடன் சுங்கத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்