வேலை செய்த வீட்டில் தங்க,வைர நகைகள் திருட்டு – அண்ணன், தங்கை கைது..!

கோவை காந்திபுரம் லட்சுமண நகர் 2வது வீதியை சேர்ந்தவர் லோனன். இவரது மனைவி வின்னா ஸ்டெப் (வயது 34) இவர்களது வீட்டில் பி. என்.புதூர், லிங்கனூர் மேகலா என்ற பரிமளா ( வயது 33) இவரது அண்ணன் ஸ்ரீஹரி (வயது 36)ஆகியோர் வீட்டு வேலை செய்து வந்தனர். வீட்டில் யாரும் இல்லாத நேரம் அங்கிருந்த வைர மோதிரம், டாலர் பொருத்தப்பட்ட தங்க செயின் ஆகியவற்றை திருடிவிட்டனர். இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டு வேலை செய்து வந்த மேகலா என்ற பரிமளா (வயது 33) அவரது அண்ணன் ஸ்ரீஹரி (வயது 36) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து வைர மோதிரம்,தங்கச் செயின் மீட்கபட்டது.இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டனர்.