அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து 28 பவுன் நகை திருட்டு-கோவையில் துணிகர சம்பவம்..!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னே கவுண்டன் புதூர், மனோன்மணி கார்டனை சேர்ந்தவர் மாமணி ( வயது 32 )இவர் அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார் .இவருக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் கார்த்திக் (வயது 32) சாப்ட்வேர் இன்ஜினியர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் மாமணி மற்றும் கார்த்திக் ஆகியோர் தங்களது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றனர். நேற்று காலையில் திரும்பி வந்து பார்த்தபோது அந்த 2 வீடுகளின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாமணி, கார்த்திக் ஆகியோர் தங்கள் வீடுகளுக்குள் சென்று பார்த்தனர். அப்போது மாமுனி வீட்டில் 26.பவுன் தங்க நகைகள் வெள்ளி பொருட்கள்,௹ 25 ஆயிரம் பணம் மற்றும் கார்த்திக் வீட்டில் 2 பவுன் தங்க நகைகள், ரூ6, 500 பணம் திருட்டுபோனது தெரியவந்தது. இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள் .இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.