கோவை அரசு மருத்துவமனை வார்டில் ஆசிரியையிடம் திருட்டு..!

கோவை : நீலகிரி மாவட்டம் ஊட்டி பர்வில் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் விமல் ராஜ் .இவரது மனைவி ஜெஸ்டின் வினோதினி ( வயது 43) இவர் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் .இவரது விமல்ராஜ்க்கு இருதய பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 12ஆம் தேதி அட்மிட் ஆகி இருந்தார். கணவருக்கு உதவியாக ஜெஸ்டின் வினோதினி இருந்து வந்தார். நேற்று இரவு அவர் தூங்கும் போது படுக்கைக்கு அடியில் வைத்திருந்த பையை யாரோ திருடிவிட்டனர். அதில் ஏடிஎம் கார்டு , ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ,கார் சாவி, லைசென்ஸ் , 2 பவுன் வளையல் ஆகியவை இருந்தது .இவற்றை யாரோ திருடி சென்று விட்டனர் . இது குறித்து ஜெஸ்டின் வினோதினி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் .காவலாளிகள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட அரசு மருத்துவமனையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா மூலம் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.