நடுரோட்டில் இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் – வாலிபர் மீது வழக்குபதிவு ..!

கோவை ராமநாதபுரம் சுங்கம், காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் .இவரது மகள் பிரீத்தி (வயது 21) இவர் காந்திபுரத்தில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பிரபாகரன் என்பவர் இவரை வழிமறித்து ஏன் நான் போன் செய்யும் போது எடுத்துப் பேச மாட்டேங்கிறாய் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து பிரித்தி இராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரபாகரன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகள் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.