இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த தொழிலாளி தலைமறைவு..!

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் ( வயது 40) கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மனைவியும் , குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் அவர் குனியமுத்தூரில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வந்து தங்கினார் .இந்த நிலையில் மாமனாரின் வீட்டின் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் 24 வயதான இளம்பெண் வீடு உள்ளது .சம்பவத்தன்று அவர் தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அதை அந்த வீட்டின் ஜன்னல் வழியாக ராஜேஷ் மறைந்து இருந்து பார்த்து ரசித்துள்ளார். அந்த நேரத்தில் அந்த இளம் பெண்ணின் சகோதரி அந்த வழியாக வந்தார் .அவர் ராஜேஷ் தனது வீட்டின் குளியல் அறையை எட்டிப் பார்த்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.. உடனே குளித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணும் வெளியே வந்தார் .அப்போது அவர்கள் 2 பேரையும் ராஜேஷ் மிரட்டியதுடன் ஆபாசமான முறையில் நடந்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் தனது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.. இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ராஜேசை தேடி வருகிறார்கள்.