பனை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாப பலி..!

கோவை : அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பக்கம் உள்ள மேலூரை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 34) இவர் கிணத்துக்கடவு பக்கம் உள்ள சொலவம் பாளையத்தில் தங்கியி ருந்து பனைமரம் ஏறும் தொழில் செய்து வந்தார்.நேற்று அங்குள்ள பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்காக ஏறினார். அப்போது திடிரென்று கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் .இது குறித்து அவரது மனைவி ஜெயந்தி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..