தாளவாடி அருகே கிராமத்தில் புகுந்து மரத்தடி விநாயகரை சுற்றி வந்த காட்டு யானை – செம வைரலாகி வருகிறது.!!

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதற்கிடையே  தாளவாடி மலைப்பகுதியில் உள்ள  நெய்தாளபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் நடமாடியது. அப்பகுதியில்  மரத்தடியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கு வந்த காட்டு யானை மரத்தடி விநாயகர் கோவிலை சுற்றி வந்து சிறிது நேரம் அப்பகுதியில் நடமாடியது. காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். காட்டு யானை ஊருக்குள் புகுந்து மரத்தடி விநாயகர் கோவிலை சுற்றி வந்த சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது..