வீட்டு சுவர் இடிந்து விழுந்து முதியவர் பரிதாப பலி..

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அண்ணா அவென்யூவை சேர்ந்தவர் நாகலிங்கம் ( வயது 57 ) இவரது மகன் அசோக் குமார் அங்குள்ள லட்சுமி நகர் முருகன் லேஅவுட் புதிதாக வீடு கட்டி வருகிறார்.நேற்று 10 அடி உயரத்திற்கு செங்கல் சுவர் கட்டப்பட்டது. அந்த சுவரை நாகலிங்கம் பிடித்தாராம். அப்போது திடிரென்று சுவர் இடிந்து அவரது தலையில் விழுந்தது .இதில் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார் .இது குறித்து அவரது மகன் அசோக் குமார் மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..