இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.50 லட்சம் திருட்டு..!

கோவை ஒண்டிபுதூர், கிருஷ்ண நாயுடு வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 63) ஓய்வு பெற்ற மில் தொழிலாளி . இவர் நேற்று சிங்காநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ 2 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்தார்.பின்னர் திருச்சி ரோட்டில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது சீட்டு அடியில் வைத்திருந்த ரூ 2,லட்சத்து 50 ஆயிரத்தை காணவில்லை. யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்து தேவராஜ் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..