ஹீட்டர் போட்டு குளிக்கும் போது மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆழியாறு அன்பு நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜ்குமார் (வயது 28) கூலி தொழிலாளி .இவர் நேற்று அவரது வீட்டில் ஹீட்டர் போட்டு குளித்துக் கொண்டிருந்தார் .அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது தந்தை ஆறுமுகம் ஆழியார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.