கோவை வக்கீல் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்-தந்தை, மகன் கைது..!

கோவை மதுக்கரை அருகே உள்ள வழுக்கு பாறை பாண்டிக்கல் தோட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மகன் பிரகதீஸ்வரன் ( வயது 27) வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். . இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆறுச்சாமி (வயது 72) அவரது மகன் சாமிநாதன் ( வயது 38) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று சாமிநாதனும் அவரது தந்தை ஆறுச்சாமியும் சேர்ந்து பிரகதீஸ்வரனை இரும்பு கம்பியால் தாக்கினார்கள் . இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வக்கீலின் அண்ணன் செந்தில்குமார் மதுக்கரை போலீசில் புகார் செய்தார் .போலீசார் சாமிநாதன், அவரது தந்தை ஆறுச்சாமி ஆகியோரை நேற்று மாலை கைது செய்தனர் .இவர்கள் மீது கொலை மிரட்டல் தாக்குதல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..