பட்டா மாறுதலுக்காக 1 லட்சம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக சிக்கினார்..!

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் தாலுகா தாசில்தார் தென்னரசு பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர் தனது பெயரில் உள்ள சுமார் 2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளர். அதற்கு தாசில்தார் 3,00,000 ரூபாய் லஞ்சம் கேட்டு அதில் முதல் தவணையாக 1,00,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில் கருப்பையா லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாமல் இராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் செய்து உள்ளார். மேற்படி புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பி உறுதி செய்வதற்காக காவல் ஆய்வாளர் இராஜேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் மறைந்திருந்தனர். அதனை தொடர்ந்து தாசில்தார் தென்னரசு லஞ்ச வாங்கிதை மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இது சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது..