வாலிபரை துப்பாக்கியால் சுட்டு கண்டம் துண்டமாக வெட்டியவர்கள் பரபரப்பு வாக்குமூலம்.!!

குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் பகுதியைச் சேர்ந்தது செம்பரம்பாக்கம் ஏரி இந்த ஏரியில் கை கால்கள் தலை மற்றும் மார்பு பகுதிகளில் எருமை கறி வெட்டுவது போல் வெட்டி ஏரியில் மிதப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஏரியில் இரு கால்களையும் உடல் பகுதிகளையும் மீட்ட போலீசார் தலை மற்றும் கைகளை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதில் கொலையானவர் யார் என்பதில் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அதிரடி அமல்ராஜ் தனிப்படை அமைத்து சரியான முறையில் விசாரணை வேண்டுமென உத்தரவிட்டார். காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்துக் கொண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு சல்லடை போட்டு தேடினர் . இந்த நிலையில் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் பூமிநாதன் வயது 34 என்பவன் காணவில்லை என அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர் . விசாரணையில் செம்பரம்பாக்கம் ஏரியில் கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலின் அருகே அவர் அணிந்திருந்த டீ ஷர்டை வைத்து துப்பு துவங்கியது. அது பூமிநாதன் தான் என உறுதி செய்தனர். பூமிநாதனின் செல்போனை வைத்து அவர் கடைசியாக யார் யாரிடம் பேசினார் என்பதையும் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை அருகே இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது குன்றத்தூர் அருகே சிறுகளத்தூர் பிலிப் குமார் என்பவரிடம் பேசியதை கண்டுபிடித்தனர். குன்றத்தூர் போலீசார் பிலிப் குமார் போலீஸ் பாணியில் விசாரித்த போது நண்பர்களுடன் சேர்ந்து பூமி நாதனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டான்.

இது குறித்து போலீசார் கூறுகையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காவலாளியாக பணியாற்றிய நாகலட்சுமி வயது 32 பிலிப் குமாருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்தது. அங்கு காவலாளியாக பணியாற்றி பூமிநாதன் நாகலட்சுமி நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் நீ போய் பிலிப் குமாரை வெச்சிட்டு இருக்காயே நீ சினிமா நடிகை போல் இருக்கிறாயே என பேசி உள்ளான். இதனால் நாகலட்சுமி பிலிப் குமார் தொடர்பை துண்டித்துக் கொண்டார். இதனால் பிலிப் குமாருக்கும் பூமிநாதனுக்கும் விரோதம் ஏற்பட்டது.  பிலிப் குமார் தனது நண்பர் விக்னேஷை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிள் மூலம் பூமி நாதனை ஏற்றிக்கொண்டு செம்பரம்பாக்கம் ஏரி கரையில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இருந்தும் அவனது ஆத்திரம் அடங்காமல் கறி வெட்டும் கத்தியால் எருமை கறி வெட்டுவது போல் சரமாரியாக வெட்டி பூமிநாதனின் உடலில் வழிந்த ரத்தத்தை பிலிப் குமார் தனது உடல் எங்கும் பூசிக்கொண்டு வெறி அடங்காமல் துள்ளி குதித்துள்ளான். அப்போதும் அவனது வெறி அடங்காமல் அவனது ரத்தத்தை நாக்கில் தடவி ருசித்துள்ளான் .மேலும் தலை கைகளை வண்டலூர் அருகே உள்ள முடிச்சூர் ஏரியில் வீசி உள்ளான் என போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளான். போலீசாரம் தலை மற்றும் கைகளை மீ ட்டனர். போலீசார் வழக்கு பதிந்து பிலிப் குமார் விக்னேஷ்இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். சிறையில் அடைக்கப்பட்டனர்…