விசாகப்பட்டினத்தில் வட்டாட்சியர் அடித்து கொலை-நில மாஃபியா கும்பல் வெறிச்செயல்.!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நில மாஃபியா கும்பலால் வட்டாட்சியர் சனபால ரமணய்யா வஜ்ரபு அடித்து கொலை செய்யப்பட்டார். திம்மிலாடா கிராமத்தை சேர்ந்த வட்டாட்சியர் சனபால ரமணய்யா மீது 3 பேர் கொண்ட கும்பல் இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த வட்டாட்சியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..