கடையில் எரிந்த தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தில் இருந்த வாக்கி டாக்கி மாயம்..!

பூந்தமல்லி: அய்யப்பன்தாங்கலில் தீயணைப்பு வாகனத்தில் இருந்த வாக்கி டாக்கி மாயமானது.
சென்னையை அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் நேற்று மாலை பவுல் என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே, இதுபற்றி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் மதுரவாயல், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
பின்னர் , மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் வண்டியை எடுத்தப் போது , வண்டியில் இருந்த வாக்கி டாக்கி மாயமாகி இருந்தது. இதுபற்றி , மாங்காடு போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.